Wednesday, May 18, 2011

ஊழல் புகாரில் சிக்கியுள்ள சோனியா ஊழல் எதிர்ப்பாளரானார்!


First Published : 02 May 2011 02:04:21 AM IST

Last Updated : 02 May 2011 02:13:38 AM IST

நாட்டு மக்கள் அனைவரும் சொல்லிவிட்டார்கள், இத்தோடு போதும் என்று; அப்போதுதான் யாரும் எதிர்பாராதது நடக்கிறது.
 யாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.
 அப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.
 ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் என்று அவரை யார் சொல்வது? சுப்பிரமணியன் சுவாமியா? நானா? இல்லை.
 அப்படிச் சொல்வது கிளியோ பாஸ்கல்.
 ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர்தான் இந்த கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று.
 ""உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா?'' என்று.
 ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.
 யார் இந்த கிளியோ பாஸ்கல்?
 சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெüரவமிக்க உறுப்பினர்.
 அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு - ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர்.
 ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளம் உலகிலேயே 3-வது இடத்தில் இருக்கிறது. 3 கோடியே 80 லட்சம் பேரால் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 50 கோடி. 2005-ல் தொடங்கப்பட்ட இந்தச் செய்தி இணைய தளம் உடனடியாக உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.
 இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ.ஓ.எல். என்ற நிறுவனம் ரூ.1,450 கோடி கொடுத்து இந்த இணையதளத்தை வாங்கியிருக்கிறது.
 2008-ம் ஆண்டு இந்த இணையதளத்தைத்தான் உலகின் மிகச்சிறந்த செய்தி இணையதளமாக லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்சர்வர்' மதிப்பிட்டிருக்கிறது.
 கிளியோ பாஸ்கல் யார், அவர் எழுதும் ஹஃபிங்டன் போஸ்ட் இணையதள செய்திப் பத்திரிகை எத்தகையது என்று பார்த்தோம். சோனியா காந்தி குறித்து அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று இனி பார்ப்போம்.
 "கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார்.
 சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணுமுணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.
 1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார்.
 எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.
 காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு 1984-ல் இருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின.
 நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.
 போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார்.
 போஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார். சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார்.
 இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.
 அர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்தில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.
 ஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.
 சுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை.
 1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.
 1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
 அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
 பிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.
 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்துவிடுவார்.
 உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல்.
 சோனியா காந்தி மீதான ஊழல் புகாருக்கு சர்வதேசத் தன்மை இருக்கிறது என்கிறார் பாஸ்கல்.
 இந்தியாவில் நடப்பவற்றை இப்போது நாம் பார்ப்போம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் சோனியா காந்தியின் பின்னணி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவே பார்க்கின்றன. சோனியா காந்தியின் ஊழல்குறித்து பாஸ்கல் எழுதுவது என்னவென்றே இந்தியர்களுக்குப் புரிவதில்லை. சோனியா பதவியை விரும்பாத தன்னலமற்ற தலைவி என்றும், ஊழலுக்கு எதிரான தேவதை என்றும்தான் இந்தியர்களில் பலர் பார்க்கின்றனர். அதனால்தான் ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்று பெரிய நேர்மையாளரைப் போல அவரால் வேஷம் போட முடிகிறது.
 அவர் உண்மையிலேயே நேர்மையானவர்தானா என்று ஆராய்வதற்குப் பதிலாக, ஊழலை ஒழிப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியைப் பாராட்டி மகிழ்கிறது.
 இந்தியர்கள் பேராசை பிடித்தவர்களாகிவிட்டார்கள், அவர்களுடைய தார்மிக உலகு சுருங்கிவிட்டது என்று அவர் இந்தியர்களையே வசை பாடுகிறார், "", சோனியா எப்படி வெளிப்படையாகப் பேசிவிட்டார்'' என்று அகமகிழ்கின்றன இந்திய செய்தி ஊடகங்கள்.
 ஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியவாதி அண்ணா ஹஸôரேவுக்குத் தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.
 சோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹஸôரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.
 சோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹஸôரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.
 அவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.
 கிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
 இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்: ஊழல் விவகாரங்களில் சிக்கி, சந்தேகத்துக்கு உரியவராகத் திகழும் சோனியா காந்தி, ஊழலை ஒழிக்க வந்த தேவதையாக இந்தியப் பத்திரிகைகளால் சித்திரிக்கப்படுகிறார்.

Wednesday, January 26, 2011

தமிழ் ஓவியாவில் எழுதியது...குறளும் சங்கராசாரியரும்...


ஏதோ மடையன் கீதாவில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி கூறப்பட்டுள்ளது என்று கூறியதை எடுத்து ஆண்டிருக்கிறீர்கள். தங்களைத் தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள்.
चातुर्वर्ण्यं मया सृष्टं गुण-कर्म-विभाकशः ।
तस्य कर्त्तारमपि मां विद्ध्यकर्त्तारमव्ययम् ।। गीता ४ : १३ ।।
சாதுர்வர்ண்யம் மயா ஶ்ருஷ்டம் குணகர்ம-விபாகஶஹ
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தி அகர்த்தாரம் அவ்யயம் (கீதா ௪ :௧௩)
நான்கு வர்ணங்கள் என்னால் குணத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டன. அவற்றை நான் படைப்பது போல் தோன்றினாலும், நான் படைக்கவில்லை. (இந்த குணத்தைச் சாரந்தவர்கள் இந்த வர்ணம் என்பது பகவானின் சட்டம். அவரவர்களே தங்கள் குணங்கள் மூலமாக ஓரொரு வர்ணத்தைச் சார்ந்தவர்களாகிறார்கள். பள்ளிக்கூட மாணவனுக்கு வெற்றி மதிப்பெண்ணோ, தோல்வி மதிப்பெண்ணோ போடுவது ஆசிரியரானாலும் அது மாணவனின் படிப்பின் அடிப்படையிலேயே இடப்படுவதால் மாணவனே தனது வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறான்.)
ब्राम्हण-क्षत्रिय-विशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभाव-प्रभवैर्गुणैः ।। गीता १८ : ४१-४४ ।।
ப்ராம்ஹண-க்ஷத்ரிய-விஶாம் ஶூத்ராணாம் ச பரந்தப
கர்மணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ-ப்ரபவைர்குணைஹீ (கீதா ௧௮ :௪௧-௪௪)
ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைஶ்யர் மற்றும் ஶூத்ரர்களின் செயல்கள் அவர்களுக்கு இயல்பாயமைந்த குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
ब्राम्हणः क्षत्रियो वैश्यस्त्रयो वर्णा द्विजातयः ।
चतुर्थ एकजातिस्तु शूद्रो नास्ति तु पञ्चमः ।। मनु १० : ४ ।।
ப்ராஹ்மணஹ க்ஷத்ரியோ வைஶ்யஸ்த்ரயோ வர்ணா த்விஜாதயஹ
சதுர்த்த ஏகஜாதிஸ்து ஶூத்ரோ நாஸ்தி து பஞ்சமஹ (மநு ௧0 :)
ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைஶ்யர் ஆகிய மூவரும் த்விஜர்கள். நான்காவது ஶூத்ரர். ஐந்தாவது ஒரு வர்ணம் என்பது கிடையாது.
ஆயிரக்கணக்கில் இருக்கும் ஜாதிக்கும், நான்கேயான வர்ணத்திற்கும் முடிச்சு போடுவது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது.
கீதாவைச் சொன்னவனும் ப்ராம்ஹணன் அல்லன். கேட்டவனும் ப்ராம்ஹணன் அல்லன். எழுதினவனும் ப்ராம்ஹணன் அல்லன். அதைப் படிப்பவனும் ப்ராம்ஹணனாக இருக்கவேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 

Thursday, January 20, 2011

குமரிக் கொடூரங்கள்

1.       1982-இல் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலய திருவிழாவின்போது கிறிஸ்தவ மத பிரச்சார வெளியீடுகள் இந்துக்களிடம் விளம்பப்பட்டது. பெண்களின் சபரிமலையான மண்டைக்காட்டிற்கு பெருமளவில் பக்தைகள் கேரளாவிலிருந்து கட்டு கட்டி வருவர். அப்பெண்களின் சேலையை உருவி மானபங்கப்படுத்தினர் கிறிஸ்தவ மீனவர்கள். கலவரத்தில் காணாமல் போன இந்துக்கள்.
2.       பிள்ளையார்புரம் அம்மன் கோவில் பவனி கிறிஸ்தவர்களுக்காகத் தடுப்பு.
3.       உடையார்விளை நாராயண சாமி கோவில் மதில் சுவரை மாவட்ட நிர்வாகம் கிறிஸ்தவர்களுக்காக உடைத்தது.
4.       மணலி பட்டா பூமி பிள்ளையார் கோவில் பூஜை தடுப்பு.
5.       அருமனை ாஸ்தா கோவில் மண்டல பூஜை தடுப்பு.
6.       கைதக்குழி ஶாஸ்தா கோவில் அருகில் திடீர் சர்ச் உருவாக்க முயற்சி.
7.       கிருஷ்ணன் கோவிலில் திடீர் என்று அந்தோணியார் சொரூபம் வந்து அதனை எடுக்க மறுக்கும் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு ஆதரவான மாவட்ட நிர்வாகத்தின் செயல்.
8.       தெக்குறிச்சி கடலோர பகுதி அய்யா கோவில் கிறிஸ்தவ மீனவர்கள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
9.       பண்ணையூர் கிறிஸ்தவர்கள் பதற்றம் ஏற்படுத்துகின்றனர்.
10.   ஒற்றைதெங்கன் விளையில் கிறிஸ்தவர்கள் பதற்றம் ஏற்படுத்துகின்றனர்.
11.   மண்டைக்காட்டில் சாலையோரக் கடைகளுக்கு கிறிஸ்தவர்கள் வரிவசூல், பஞ்சாயத்து வேடிக்கை.
12.   தடைசெய்யப்பட்டிருந்த குலசேகரம் ஐக்கிய கிறிஸ்துமஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பையும் மீறி காவல்துறை அனுமதி.
13.   மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம் அருகில் சுனாமி குடியிருப்பு நிலத்தில் சட்டத்தை மீறி திடீர் சர்ச் கட்டி மீண்டுமொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சி, போராட்டம் நடத்திய இந்துக்கள் கைது.
14.   அரசியல்வாதிகள் மூலம் அதிகாரிகளை வசப்படுத்தியும், நீதிமன்றத்தை ஏமாற்றியும் குமாரபுரம் கைதோட்டில் ாஸ்தா கோவில் அருகில் சட்டவிரோதமாக திடீர் சர்ச் அமைக்க முயற்சி
15.   தக்கலை கரைகணடார்கோணம் சந்திப்பில் பட்டா நிலத்தில் விநாயகர் ஆலயபூஜைக்கு அரசே தடைவிதித்துள்ள அவலம்.
16.   அரமன்னம் காவுவிளை ஶப்த மாதர்கள் கோவில் பாரம்பரிய திருவிழாவிற்கு குந்தகம் ஏற்படுத்த சர்ச்சே இல்லாத இடத்தில் அதிகாரிகள் உறுதுணையோடு புதிதாக கிறிஸ்துமஸ் விழா.
17.   திருவட்டாறு புத்தன்கடை ஸந்திப்பில் அனுமதியில்லாமல் திடீர் குருசடி, இந்துக்களின் தந்திகள், மனுக்கள் காற்றில் பறந்த வினோதம்.
18.   ஆற்றூர் பள்ளிக்குழிவிளை காவு கோவில் அருகில் அனுமதி இல்லாமல் ஜபக்கூடம், விளைவு – பாரம்பரிய காவு கோவில் திருவிழாவிற்கு தொடர் முட்டுக்கட்டை.
19.   திருவட்டாறு பாலூட்டுவிளையிலும், உம்மன்கோட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் தடையுத்தரவை மீறி தொடரும் சட்டவிரோத சர்ச் நடவடிக்கைகள், வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகளும், காவல்துறையும்.
20.   குலசேகரம் குளச்ச விளாகத்தில் கோவில் விழா நடத்த இடையூறு. இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல், பொய் வழக்கு.
21.   தோவாளை ஒன்றியம் வடக்கு மார்த்தாலில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை சேதப்படுத்தி பாதுகாவலுக்கிருந்த இந்து இளைஞர்கள் வெட்டிச் சாய்ப்பு – நாளிது வரை நடவடிக்கை இல்லை.
22.   தடிக்காரன்கோணம் ஸ்ரீ தர்மஶாஸ்தா கோவில் சிலைகளை உடைத்த கயவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை,
23.   பார்வதிபுரத்தில் திடீர் ஜபக்கூடம் அமைக்க முயற்சி. நியாயம் கேட்டுப் போராடிய இந்துக்கள் கைது.
24.   ஜபக்கூடமாக மாறிவரும் ராணித்தோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை.
25.   நாலுமாவடி ஜபக்கூட்டத்திற்கு சனிக்கிழமைதோறும் சிறப்புப் பேருந்து. கன்யாகுமரி ஸ்ரீநிவாஸ கல்யாணத்திற்கு சிறப்பு பேருந்து மறுப்பு.
26.   புத்தளத்தில் பட்டா நிலத்திலிருந்த ஶிவசுயலைமாட சாமி திருச்சிலையை நடுஇரவில் கிரேன் மூலம் அகற்றிய காவல்துறை. மறியல் செய்த இந்துக்கள் கைது.
27.   கன்யாகுமரியில் அனுமதியுடன் பட்டா நிலத்தில் நிறுவப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை கிறிஸ்தவர்களின் நெருக்கடியால் கிரேன் மூலம் அரசே தூக்கிச் சென்ற அவலம்.
28.   போதகர்களின் கூடாரமாக மாறிவரும் ஆசாரிப்பள்ளம் அரசு கன்யாகுமரி மருத்துவ கல்லூரி. மௌனம் ஸாதிக்கும் ஸுகாதாரத்துறை
29.   திங்கள் நகர் இராதாகிருஷ்ணன் கோவில் அருகில் அனுமதி இல்லாமல் குருசடி கட்ட முயற்சி.
30.   தக்கலை ஒன்றியம் வாழோட்டில் வீடு என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த இடத்தில் ஊராட்சித் தலைவரின் முழு ஆதரவோடு வலுக்கட்டாய ஜபக்கூட்டம்.
31.   விழுந்தையம்பலத்தில் சர்ச் விழாவிற்கு ஒலிபெருக்கி அனுமதி அளித்துவிட்டு, இந்து ஆலய விழா ஒலிபெருக்கிகளை அகற்றிய காவல்துறை.
32.   முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையே இந்து மாணவர்களுக்குப் பைபிள் கொடுத்து மதம் மாற்ற முயற்சி. போராடிய இந்துக்கள் மீது பொய்வழக்கு.
33.   அஞ்சுகண்ணு கலுங்கில் உரிமையில்லா இடத்தில் சர்ச் கட்ட முயற்சி. சட்டமன்ற உறுப்பினரே களமிறங்கி அராஜகம்.
34.   காளிமலைக்கு சிறப்புப் பேருந்து இல்லை. காளிமலையில் கிறிஸ்தவர்கள் ஆக்ரமிக்க முயற்சிக்கும் இடத்திற்கு சிறப்பு பேருந்து.
35.   அருமனை தச்சூர் கோணத்தில் தேவாலய சிலை உடைப்பு – இந்துக்கள் மீது புகார் – கிறிஸ்தவ அரசியல்வாதி மகன் பிடிபட்டதால் காவல்துறை மௌனம்.
36.   கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை, இந்து மாணவர்களுக்கு மட்டும் இல்லை.
37.   பட்டா நிலமெல்லாம் சர்ச் கட்டிக்கொள்ளலாம் என்கிறார் முன்னாள் முதல்வர். புறம்போக்கில் கூட கட்டிக்கொள்ளலாம் என்கிறார் இன்னாள் முதல்வர். போட்டி போட்டு கிறிஸ்தவர்கள் மீது பரிவு. இந்துக்கள் புறக்கணிப்பு.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் 9-1-2011 ஞாயிறு மாலை 4.00 மணி, தக்கலை அண்ணா சிலை சமீபம்.